யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை ஏற்றிக் கொண்டு யாழ். நோக்கிப் பயணித்த ஹயஸ் வேன் சாரதி முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் (இரு சக்கர உழவியந்திரம்) பின்னால் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

Social Share

Leave a Reply