சிவனொளிபாதமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை

சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள் சிவனொளிபாதமலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளுக்கு முன்னோக்கி செல்லும் வழிகளை அறிவிக்கும் விஷேட கலந்துரையாடல் விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன நஹிமி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நல்லதண்ணி கிராம சேவை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதற்கமைய விடுமுறை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் சிவனொளிபாதமலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply