அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

இதன்படி எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2024ம் ஆண்டுக்கான தேசிய வெசாக் தின நிகழ்வு இம்முறை மாத்தளையில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மாத்தளை நகரிலுள்ள மதுபானசாலைகள் நாளையும் (21), நாளை மறுதினமும் (22) மூடப்படவுள்ளன.

இதன்படி, மாத்தளை நகரிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நான்கு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version