A/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

2023ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

இம் முறை பரீட்சைக்கு 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களுள் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version