மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று(29.05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி வரை நீடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version