பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 13 பேர் வைத்தியசாலையில்

வரக்காபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வரக்காபொல பிரதேசத்திலிலுள்ள கால்வாய் ஒன்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தலவர்கள் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பானவிசாரணைகளை வரக்காபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version