சம்பந்தனின் மறைவிற்கு எதிர்கட்சித் தலைவர் இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று நள்ளிரவு காலமானதையடுத்து; பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்” என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்,

“அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version