தரம் 9 மாணவர்களின் கல்வி முறைமையில் முக்கிய மாற்றம்  

பாடசாலையிலிருந்தே தொழில் முனைவு பற்றிய புரிதலும், தொழில் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

புதிய கல்வி முறையினுடாக, தரம் 9 மாணவர்களுக்கு பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டங்கள் தொடர்பில் தெரிவினை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 

அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்குவது கல்வியின் அடிப்படை நோக்கம் என்றும், முன்பள்ளிக் கல்வியிலிருந்தே திறன்கள் மற்றும் சிறந்த மனப்பான்மை வளர்ப்பதற்கு தேவையான அடித்தளத்தை த் தயாரிப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்காக யுனெஸ்கோ, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் பிற நபர்களின் ஒத்துழைப்புடன் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version