சுதந்திரக் கட்சியிலிருந்து தயசிறி நீக்கப்பட்டமைக்கு இடைக்கால தடை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை மற்றும் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்குவதற்கு கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து  தன்னை நீக்கியமைக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியில் முக்கியஸ்தர்களுக்கு எதிராக தயாசிறி ஜயசேகர மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை இன்று(02.07) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், தயாசிறிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version