சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (04) காலை மாதம்பே – இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த பஸ்ஸொன்றுடன்
மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையிர் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version