ஹிருணிகாவின் பிணை ஒத்திவைப்பு 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹிருணிகாவின் பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து, மனு மீதான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(04.07) ஒத்திவைத்தது.

ஆட்சேபனைகளை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

2015ம் ஆண்டு கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் டிபென்டர் ரக வாகனத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கடந்த மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 3 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொடை பகுதியில் வைத்து கறுப்பு நிற டிபென்டர் ரக வாகனத்தில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமில பிரியங்கர தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியிருந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version