விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனது பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (05.07) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கிலிருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று பலரும் அஞ்சலி செலுத்தினர்.

திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை
இறுதிக்கிரியை நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version