பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றதன் பின்னர், 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தார் .

குறித்த நடவடிக்கையை நடமாடும் சேவைமூலம் வழங்குவது குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

இன்று (26/11) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், குறித்த சிகிச்சை நிலையத்திலேயே பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி வழங்க  தீர்மானம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version