ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே நேற்று (19.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா தலைமையக சிரேஷ்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற
தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 13 பக்கற்றுகள் அடங்கிய 2590 மில்லி கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பதுளையை சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version