
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.
தற்போது கண்டியில் நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற கீதா குமாரசிங்க, தற்போது பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.