மகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை உயிரிழப்பு

மகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை உயிரிழப்பு

நீர்க்கொழும்பு, மங்குளிய பிரதேசத்தில் நேற்று(09.09) மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவரின் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மகளின் கணவன் தலையிட்டதால் பிரச்சினை மேலும் வலுவடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 40 வயதுடைய நபரை அவரின் மருமகன் கூறிய ஆயுதத்தால் தாக்கியமையினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைப் பிடிப்பதற்கு நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version