​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது

​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கைது

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பிற்கு எதிராகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிர்மாணிப்பதற்கு எதிராகவும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமில்லை எனவும், அவர்களை கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

விதிமுறைகளை கவனத்திற்கொள்ளாது போராட்டக்காரர்கள் பேரணிக்கு தயாரானதால், ​​ஏற்பாட்டாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் ​​மற்றொரு கும்பலும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version