
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் கலாச்சார விழா மன்னார் நகரசபை மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நடைபெற்றது.
மன்னார் நகரப் பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக மாவட்டச் செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி)மா.சிறிஸ்கந்த குமார், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார், கலாபூசனம் ஜோண் பொஸ்கோ மற்றும் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கலந்து கொண்டனர்.
இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்னிருந்து நகரசபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர் நகரசபை மண்டபத்தில் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வு மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்