தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 158 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 243 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 58 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 92 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version