மாவீரர்தின அனுஷ்டிப்பு அனுமதிக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

மாவீரர்தின அனுஷ்டிப்பு அனுமதிக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

வடக்கு கிழக்கில், மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற வழி செய்த ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, தனது நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

“மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என இன்று (29.11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவாறு தெரிவித்துள்ளார்.

“மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில்,மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில்,இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும், இம்முறை ஒரு நிறைவான   நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version