பதுளை – எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்

பதுளை - எல்ல ரயில் சேவை மேலும் தாமதம்

பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலத்த மழை காரணமாக ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பசறை பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை – லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படவுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version