வாடகையா? வீட்டை விடுறீங்களா? மஹிந்தவுக்கு அநுரவின் தகவல்

வாடகையா? வீட்டை விடுறீங்களா? மஹிந்தவுக்கு அநுரவின் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் அரசாங்க வீட்டுக்கு 46 இலட்சம் ரூபா மாதாந்த வாடகையாக கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அரசாங்கத்தால் மாதாந்தம் 30,000 ரூபா மட்டுமே வாடகையாக செலுத்த முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டில் அவர் தொடந்து வசிக்க விரும்பினால், அவரது சம்பளத்தில் 1/3 பகுதி அதற்கான கொடுப்பனவாக வழங்கப்படும். அது 30,000 ரூபா. மிகுதி பணத்தை சேர்த்து 46 இலட்சம் ரூபா மாதாந்த வாடகையாக செலுத்த வேண்டுமெனவும், இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் கூறியுள்ளார். நேற்று(19.01) கட்டுக்குருந்தையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்தார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version