காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து

காத்தான்குடி - கொழும்பு பேரூந்து விபத்து

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக 14 பேர் சேருநுவர வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 9 பேர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக பேரூந்து வீதியிலிருந்து விலகி மரத்துடன் மோதுண்டமையினால் புரண்டு வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுளளதாக பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கல்லாறு இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள வீதி வளைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். சேருநுவர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version