வெப்பமான வாநிலை குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை

வெப்பமான வாநிலை குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை

தற்போது நிலவும் அதிக வெப்பமான வாநிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ அல்லது அதிக வெப்பநிலைக்கு ஆளாகுவதையோ தடுக்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொள்ளுமாறும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வட, வடமத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version