மன்னாரில் கடந்த 05 நாட்களாக காணாமற்போன குடும்பஸ்தர்

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமற் போயுள்ள நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயது குடும்பஸ்தரே கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி  வவுனியா சென்று  இதுவரை வீடு திரும்பாத நிலையில் அவர் காணாமற் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280,0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாள

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version