கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும், தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் வீட்டை வாடகைக்கு பெற்று அங்கிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version