புத்தாண்டு குறுஞ்செய்தி அனுப்பாமல் 98 மில்லியன் ரூபாவை சேமித்த அரசாங்கம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்பாததன் மூலம் அரசாங்கம் 98 மில்லியன் ரூபா சேமித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார்.

அரசியல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“முந்தைய ஆட்சிகளில் புத்தாண்டிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இருந்த போதிலும் இந்த வருடம் ஜனாதிபதி புத்தாண்டு குறுஞ்செய்தியை
செய்தியை அனுப்பவில்லை.

இதனால் நாடோ அல்லது கட்சி உறுப்பினர்களோ எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை. இந்த நடவடிக்கையால் அரசாங்கம் நிதியை சேமித்துள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் புத்தாண்டு குறுஞ்செய்தி செய்திக்கு 98 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி செய்தியை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதே வெற்றி.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல சரியான தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார், ஏனெனில் அவர் சாதாரண குடிமகனின் முன்னேற்றத்திற்காக பணத்தை ஒதுக்குவதை நிரூபித்துள்ளார்” என நிலந்தி கோட்டஹச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version