தமிழ்நாடு – காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவை இன்று (14.06) முதல் 18ம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த படகு சேவை முன்னெடுக்கப்படும் கடல் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்தப் பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version