திருமலை எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்க புதிய நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து Trinco Petroleum Terminal Ltd என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

IOC நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளிலிருந்து நிர்வகிப்பதற்காக குறித்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த எண்ணெய் தாங்கிகளின் ஒரு பகுதியை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், அரச சொத்தான Trinco Petroleum Terminal Ltd நிறுவனத்தின் கீழ் செயற்படும் எண்ணெய் தாங்கிகள் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுச்சேர்ப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமலை எண்ணெய் தாங்கிகளை நிர்வகிக்க புதிய நிறுவனம்

Social Share

Leave a Reply