சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு இலங்கை சுங்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான வரவு – செலவுத் திட்ட யோசனையை செயற்படுத்தும் நோக்கில், வாகனங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள பணிப்பாளர் ஜீ. வீ ரவிபிரிய தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என வும் தெரிவித்த அவர், தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 262 வாகனங்கள் தேவையான அபராதம் மற்றும் வரிகளை வசூலித்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version