சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம்?

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானமானிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி மசகு எண்ணெய் ஏற்றுமதி இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.வோல்கா தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம்?
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version