சொப்பன சுந்தரிக்கு கிடைத்த கெளரவம்

இலங்கை திரைப்படமான சொப்பன சுந்தரிக்கு அத தெரண ஊடகம் நடாத்திய திரைப்பட விழாவில் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(08.09) அத தெரண திரைப்பட விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சொப்பன சுந்தரி இயக்குனரும் நடிகருமான மாதவன், தயாரிப்பாளரும் நடிகருமான கஜானன் ஆகியோரோடு திரைப்படக் குழுவினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான திரைப்பட நிகழ்வுக்கு சொப்பன சுந்தரி திரைப்படக்குழுவினர் அழைக்கப்பட்டமையே தமக்கு கிடைத்த கெளரவம் என கஜானன் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.

சொப்பன சுந்தரி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முழு நீள நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தொடர்பில் பலரும் தங்கள் நல்ல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிங்கள திரைப்பட பக்கமாகவும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறன நிலையில் இந்த திரைப்டப விழாவில் சொப்பன சுந்தரிக்கு வழங்கப்பட்ட கெளரவம் அவர்களுக்கான மேலும் ஒரு அங்கீகாரமே.

கொழும்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இலங்கை முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற அதேவேளை, திரையரங்குகளிலும் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version