மழை நீரில் அடித்து சென்ற பசறை வீதி!

பசறை மடுல்சீமை வீதியில் முப்பதாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மத்திகஹதன்ன வீதியின் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு ஒரு பகுதி நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலை காரணமாக பிபில டிப்போவில் இருந்து இயங்கும் அகிரிய பஸ்ஸும், பதுளை டிப்போவில் இருந்து பசறை வழியாக செல்லும் அகிரிய பஸ்ஸும் இந்த நாட்களில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து நில ஆய்வு அறிக்கையை பெற்றுக் கொண்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பசறை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply