சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது.

கண்டி நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 3.30 வரை குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் உடுதும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply