புதிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நியமனம்..!

புதிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக W.A.சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், 1993 ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் மதிப்பீட்டாளராக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன் இதுவரை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக W.A.சேபாலிகா கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply