விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!

இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியினை விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் போகத்தில் இருந்து அதனை நடைமுறைப்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்ட போது சாதகமான பதில் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு அவசியமான அனைத்து இரசாயன உரங்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை பழைய விலைக்கே விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
.

Social Share

Leave a Reply