ஜனாதிபதியைச் சந்தித்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 

ஜனாதிபதியைச் சந்தித்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30.08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில்  கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார். 

இதேவேளை, இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் இன்று (30.08) காலை கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

மேலும், இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று(29.08) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version