முச்சக்கர வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்

முச்சக்கர வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உரிய ஹென்பொல்ட் தோட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள தொடர் வீட்டுக் குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதே பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டியின் சாரதி, இரவு பயணத்தை நிறைவு செய்து இன்று(10.09) தனது வீட்டிற்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தி வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிசுவின் சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதவானின் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version