மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் – நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலநடுக்கம் பதிவானது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தாய்லாந்திலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்ட நிலையில் பேங்கொக்கில் உயரமான கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 81 கட்டுமானத் தொழிலாளர்கள் காணாமற் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version